Wednesday, May 5, 2010

தழும்புகள்.......

உணர்வுகளின் வேகத்தில்
உரையாடும் உறவுகளுக்கு..
வரலாறாய் வாழ்ந்த
தலைவர்கள்
தங்களின் தவறுகளுக்கு
தடயங்களை விட்டு செல்வதில்லை
ஆனால்
தழும்புகளை விட்டு செல்கிறார்கள்…..

தடயம் தவிர்த்த
தழும்புகள்..
வருட்த்திற்கொருமுறை
வடிவங்கள் மாற்றிக்கொள்ளும்
ஆனாலும்
வலிகளை மீட்டிச்செல்லும்……

கனத்த போர்வையினை
கண் மீது கட்டிக்கொண்டு
இருட்டென கூறாதீர்…
யாரும் இங்கு நல்லவரில்லை..
யாரும் இங்கு தீயவரில்லை….

அரசியலில்
உணர்வுகளின் நிலையைவிட
அறிவுகளின் நிலைதான்
ஆட்சி செய்கிறது….
ஏனெனில் உணர்வுள்ளவன்
தொண்டனாகிறான்…
அறிவுள்ளவன் தலைவனாகிறான்…

உணர்ச்சிவசப்படும்போது
தன்னிலை மறத்தலியல்பு…
எனினும் தன்னிலை மறந்த
வார்த்தைகள்..முன்னிலும்
நிலையை மோசமாக்கும்…
"யாகாவாராயினும் நாகாக்க…"

வாள்முனையின் காயத்தை விட
வார்த்தைகளின் காயங்கள் வலிவானவை
அழியாத தழும்புகளை
அடையாளமாய் விட்டுச்செல்லும்..
கவனம்…
வாழ்வில் மட்டுமல்ல
வார்த்தகளிலும்தான்….

No comments:

Post a Comment