Wednesday, May 5, 2010

நட்பு...

விரும்பினாலும்
விலகியிருப்பேன்
என்றது உறவு....
வெறுத்தாலும்
விரும்பியிருப்பேன்
என்றது நட்பு....

எடுக்கத்தெரிந்த
உறவுகளும்
கொடுக்கமட்டுமே தெரிந்த
நட்புகளுமாய்...
அனைவரது வாழ்விலும்
அவஸ்தைப்படுத்துகிறது உறவு..
அரவணைக்கிறது நட்பு...

நட்பாகும் உறவுகளில்லை
உறவாகும் நட்புகளுண்டு..
உறவினைத்தேர்ந்தேடுக்கும்
உரிமை நமக்கில்லை...
நட்பை தேர்ந்தெடுக்க
திறமை இன்னும் போதவில்லை...
ஏனெனில்
உறவு விதிப்பயன்
நட்பு மதியின் பயன்...

No comments:

Post a Comment