Wednesday, May 5, 2010

எங்கள் மீது பாயாதீர்…....

யார் வந்து போயென்ன??
ஐ.பி.எல் ல் அடங்கிருக்கிறது
எங்கள் ஆவி…..

தலைவனின் தாய் வந்தாராம்
யார் சொன்னது…???

தலைவனின் தாய் வந்தால்
சுவரொட்டி கூட ஒட்டப்படாமலிருக்குமா?
சுவரொட்டி கூட ஒட்டப்படவில்லையெனில்
வந்தது தலைவனின் தாயாய்த்தானிருக்குமா???

அட அப்படியேதானிருக்கட்டுமே…
வந்தவரை நாங்கள் சிறையிலடைக்கவில்லையே..
திருப்பி அனுப்பியிருக்கிறோம்
இதிலிருந்தே தெரியவில்லையா???
எங்களின் தயாளகுணம்..???

எப்பொழுது எது நேரினும்
உடனே எங்கள் மீது பாயாதீர்…

நாங்கள்
உடன் பிறப்பான ரத்தத்தின் ரத்தங்கள்..
கைராட்டை நூலோடு
உருண்டு கொண்டிருப்பவர்கள்…
உங்களுக்கு என்ன தெரியும்
எங்கள் நிலை…?????

ஒருவனின் தீக்குளிப்போடு
மயிர் நீத்த கவரிமானாய்
மானம் நீர்த்துப்போனோம்…

வாழும் பிணங்களோடு
வாதம் செய்யாதீர்….

சூதும் அதன் சூழலும்
அறிவோம் எனினும்
விதியின்மேல் பழி போட்டு
வீட்டுக்குள் முடங்கிக்கொள்வோம்

ஏனெனில்
நாங்கள் இந்தியனாய் பிறந்துவிட்ட
தமிழர்கள்……

No comments:

Post a Comment