Wednesday, May 5, 2010

தோழமைக்கு நன்றி.....

தோழமைக்கு நன்றி.....

திடீர் நன்றியில்
திகைக்க வேண்டாம்...

நன்றிகள் நவில்வது நட்பில் இல்லை
என்றாலும்
நவிலாவிடில்
நட்பே இல்லை என்பதால்
இங்கு உரைக்கிறேன் இத்தனை நன்றி....

படுகுழியின் பசிக்கு
இரையாக இருந்தவனை
பாதை மாற்றி பயணிக்க வைத்தீர்...

கடமைப்பட்டிருப்பதால்
இங்கு நன்றி உரைக்கிறேன்

கர்வத்தையே கவசமாக்கி
என்னை காத்து வந்தேன்..
ஆயினும்
கவசம் தகர்த்த அம்புகள்
சில துளைத்து
வலிகள் தந்தன வடுக்களோடு....

வானரங்கள் நிறைந்த வனத்தில்
வாரணமாய் நீ மட்டுமா ?
என்ற வக்கரிப்புக் கேள்விகளால்
வாய் மூடி கிடந்தேன்...

உங்களால்
வானரங்கள் மட்டுமே வனமல்ல
என்றுணர்ந்தேன்....

இன்றோ...
ஆசை வலையில் அகப்படவில்லை
காதல் களத்தில் வீழவுமில்லை
மோகத்தீயில் வேகவுமில்லை
சோகப்பாயில் சுருளவுமில்லை

எண்ணங்கள் கொண்டு ஏங்கவுமில்லை..
வண்ணங்கள் கண்டு மயங்கவுமில்லை..
எண்ணித் துணிக கருமமென்றே
திண்ணம் கொண்டு தீர்மானித்துவிட்டேன்....

வழிகாட்டியாய்
வந்தமைந்த தோழமைக்கு நன்றி...
என் புலனுணர்த்திய போதனைக்கு நன்றி...
புறம் சிறக்கச் செய்த புரிதலுக்கு நன்றி...

அனைத்துக்குமேலாய்
துணையாய் இருக்கும் தோழமைக்கு நன்றி....

No comments:

Post a Comment