Tuesday, June 15, 2010

நட்பு(?)க்கு...............

வருத்தப்படுகிறாயா..???
பரவாயில்லை…
வெறுத்தே விடுவாயா???
தவறொன்றுமில்லை…

நகுதல் மட்டுமே
நட்பில்லை..
தேவையெனில்
நாணுதலும் தான்….

உள்ளத்தில் விகாரமாய்
ஒளித்து வைக்கவில்லை…
உதட்டுவழி நிதானமின்றி
உரைத்திடவுமில்லை…

மரபு விதி மாறாமல்
குறிப்புணர்த்தினேன்…
நமது நிலை தாழாமல்
வலியுறுத்தினேன்…

கருத்து வழி யுத்தங்களும்..
கவிதை வழிச் சண்டைகளும்..
சபையொன்றில்
சர்வசாதாரணமானவை..

பிஞ்சு நடை பிறழல்கள்
வழமையானவையெனினும்
காலடிகள் கவனமென்ற
கருத்துணர்த்தினேன்….

நெடுந்தொலைவுப் பயணத்தின்
நிலைவாசலில் நிற்கிறோம்..
வழிகளில் பழி வரலாம்..
வாசலில் வரலாமா?????

வருத்திக் கொள்ள
சொல்லவில்லை…
திருத்திக் கொள்ளவே
சொன்னேன்……

No comments:

Post a Comment