Wednesday, May 5, 2010

எரியட்டும் உணர்வுத்தீ.......

உணர்வுகளில் கனலேற்றி
உள்ளத்தில் ஊதிவிட்டு
விழிகள் திறந்து பார்....

உன் பார்வையின் வெப்பம்
படரட்டும் உலகெங்கும்.....

இதயத்தை பூட்டிவைத்து
இரக்கத்தை சாம்பலாக்கிய
இயந்திரங்கள் எரிந்துபோகட்டும்......

மரணத்தின் வாயிலில்
மனிதத்தை தள்ளிய
மகான்கள் மாண்டு போகட்டும்.......

நிலமெல்லாம் சிவப்பாக்கி
நீரெல்லாம் விஷமாக்கி
நினைவுகள் கருகச் செய்த
நீசர்கள் நீங்கட்டும்...

இழந்த உயிர்களுக்கு
இழப்பீடு வேண்டாம்......

இருக்கும் உயிர்களுக்கு
காப்பீடாகவாவது....
எரியட்டும் உணர்வுத்தீ......

உன்னுள்ளும் என்னுள்ளும்
மட்டுமல்ல......

உலகத்தில் உயிரோடு
இருப்பதை உணர்பவர்கள்
எல்லோருக்குள்ளும்....

No comments:

Post a Comment