Wednesday, May 5, 2010

நீங்களும் இந்நாட்டு மன்னர் தானே???

அரசியல்......

அடித்தட்டு மக்களுக்கு
தொண்டராவதே புண்ணியம்

கொஞ்சம் வசதியிருப்பவனுக்கு
வெட்டி வேலை...

அறிவுஜீவிகளின் பார்வையில்
சாக்கடை...

அப்பாவிகளின் பார்வையில்
புரியாத புதிர்...

அரசியலில் இருப்போர்க்கு
கௌரவத்தின் மைதானம்

அரசுத்துறையினருக்கு
அளவில்லா அமுத சுரபி

கலைத்துறையினருக்கு
ஓய்வுகால உல்லாச விடுதி..

ஆசிரியர்களின் பார்வையில்
தீண்டாத பெருங்குற்றம்...

மாணவரின் பார்வையில்...
தொலை தூர தின்பண்டம்...

அப்படியாயின் அரசியல்
எங்கு அரசியலாக இருக்கும்.....

வாக்காளர்கள் எங்கு
விழிப்போடு இருக்கிறார்களோ

சாதி மத உணர்வுகள்
எங்கு சவப்பெட்டியில் இருக்கிறதோ....

நம்பிக்கை எங்கு
நடமாடுகிறதோ...

சுயநலம் எங்கு
தூக்கிடப்படுகிறதோ...

அங்கே அங்கே தான்
அரசியல் அரசியலாய் இருக்கும்...

வீசத்துக்கு மூன்று வாக்கு என
வீதியில் எறிந்துவிட்டு..

வேலைக்கு ஒருநாள் விடுமுறை
என்றிருந்து கொண்டு...

உங்களின் தவறுகளுக்கு
அரசியலை பழிக்காதீர்...

வழி மறிக்கும் கல்லை
அரசுதான் அகற்ற வேண்டும் என்றில்லை

நாமும் அகற்றலாம்...
நாட்டின் நலம் போற்றலாம்....

நிலம் சேரும் நீரின்
நிறம் போலவே

சேரும் இடத்திற்க்கேட்ப
சேரும் நிலைக்கேற்ப
அரசியல் புனிதமடைவதும்
புனிதம் கெடுவதும்.....

நீங்களும் இந்நாட்டு
மன்னர் தானே???

உங்கள் கை சுத்தம் தானே.....
உங்கள் உள்ளம் வெள்ளைதானே...
உங்கள் உணர்வுகள் உண்மைதானே...
உங்கள் திறம் உறுதிதானே...

வாருங்களேன் முயன்றுபார்ப்போம்
இயன்றவரை திருத்திப்பார்ப்போம்
திருந்தும் வரை வருந்திப்பார்ப்போம்
வெல்லும்வரை இணைந்திருப்போம்...

No comments:

Post a Comment