Wednesday, May 5, 2010

உலகம் ஓர்நாள் உன்வசப்படும்....

துன்புற்றோருக்கு உதவ
ஓடு
இறக்கம் கண்ட
நீராய்.....

வைதோரையும் வாழ்த்திப்
போ
வாசம் கொண்ட
காற்றாய்....

எல்லோருடனும் இனிதே
பழகு
பரந்து கிடக்கும்
வானாய்.....

தப்பைக் கண்டால்
பொங்கியெழு
வேகம் கொண்ட
தீயாய்.....

துயரம் கொண்டாலும்
பொறுமையாயிரு
நம்மைச் சுமக்கும்
நிலமாய்....

அனைத்திற்கும் மேலாய்....

கல்லெறிவோரையும்
சிறு புன்னைகையால்
தண்டித்து விடு....

உலகம் ஓர்நாள் உன்வசப்படும்.....

No comments:

Post a Comment