Wednesday, December 9, 2009

காதல்
வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத போதும்
காலம் காலமாய்
கவிதைகளின் கருப்பொருளாய்
கனவுகளின் மெய்ப்பொருளாய்
உணர்வுகளின் உருவகமாய்
உயிர்களுக்குள்ளே
உறவாடிக்கொண்டிருக்கிறது......

மண் மீது இருந்தாலும்
மண்ணோடு விண் தாண்டி
பிரபஞ்சத்தின் எல்லையையும் தாண்டி
பிரவேசிக்கும் வல்லமை
காதலுக்கு மட்டுமே உண்டு.....

இது கடவுளும் அல்ல
ஏனெனில் கடவுள்
அனைவருக்குள்ளும் தோன்றுவதில்லை
இது உணர்வும் அல்ல
ஏனெனில் ஒரு சில மணித்துளிகளில்
ஒய்வு பெற்றுவிட.....

இது வாழ்வும் அல்ல
ஏனெனில் நமக்கான காதல்
என்னோடோ உன்னோடோ
முற்றுப்பெறுவதற்கு
காலம் கடந்தபின்னும்
வாழ்கிறதே சில காதல்கள்......

பின் காதல் என்றால்தான் என்ன?
யோகிக்கு கடவுள்
போகிக்கு காதல்
ரோகிக்கு காமம்
பாவிக்கு பாவம்
இதுதான் காதல்.....

என்றாலும்
இதுவே முற்றான
முடிவும் அல்ல....
எனவே
தேடுவேன் காதலை
எனக்கான வாழ்வின் எல்லை வரைக்கும்..................