Sunday, November 15, 2009

எனதருமைத் தோழமைக்கு
என் நெஞ்சார்ந்த வணக்கம்,
என் மீதான எண்ணங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்.........
நான்.........?
வரம் கேட்கும் பக்தனுமல்ல
வரம் தரும் சாமியுமல்ல,
நான் சராசரிக்கும் கீழான மனிதன்.
எல்லோரையும் போலவே
எனக்கும் இதயம் உண்டு
இதயத்தில் ஆசை உண்டு
ஆசைகள் நிராசைகளானதுண்டு
அதனால் வலிகளும் உண்டு
ஆயினும் வலிகளை மீறி
புன்னைகைப்பேன்
நண்பர்களிடம்.

எனக்கான வலிகளுக்கு
நான் மட்டுமே காரணம்.
என் புன்னகைகளுக்கு
என் நட்புகளே காரணம்.
நான் உறவுகளால் காயப்பட்டவன்
ஆனாலும் உறவுகளோடே
உழன்று கிடப்பவன்

நான் நனவுலகில் கால் பதித்து
கனவுகளில் கைகோர்த்து
கற்பனைகளில் உலவுபவன்
என்னோடு உடன்வருவது
இயலாத காரியம்...
நான் என்னைத்தேடுவதாய்
எண்ணிக்கொண்டு
என்னோடிருப்பவர்களை தொலைப்பவன்

என்னுடனான நட்பில்
பூக்களைவிட முட்களே
உங்கள் முன் நிறையும்
ஏதாவதொரு முள்
காயப்படுத்தினால்
உங்களைவிட காயப்படுபவன்
நானாகத்தனிருக்கும்.

என் நண்பர்களிடத்தில் குறைகளில்லை
என் நட்பிடத்தும் குறைகளில்லை.
என்னிடம்தான் குறைகள்.
வலிகளை தந்துவிட்டு
வருத்தப்படுபவன் நான்
பயணிக்க விருப்பமிருந்தால்
உடன் வரவும்.
என்நட்பெனும் நந்தவனத்தில்
இன்னுமொரு மலர்கொடியாய்
சுகங்களையும் துக்கங்களையும்
உரமாக்கிகொண்டு
நம்பிக்கை நீர் பாய்ச்சி
அன்பெனும் பூக்களை
அன்றாடம் மலர்ந்துமணம் வீச
வரவேற்கிறேன்
தோழமைக்கு நன்றி...............................