Wednesday, May 5, 2010

சித்திரைப் பெருநாளாம்...

சித்திரைப் பெருநாளாம்...
சீர்மிகு திருநாளாம்...
இத்தரைத் தமிழர்க்கெல்லாம்
ஏற்றமிகு ஒருநாளாம்...

பொங்குக இன்பெமெல்லாம்
தணலிட்ட பாலாய்
தங்கட்டும் இன்பமெல்லாம்
மழலையின் சிரிப்பாய்...

விரோதி மாறி விகிர்தியாகி
விருப்பங்கள் யாவும்
இனிதே நிறைவேறி...
மங்கட்டும் துன்பமெல்லாம்
வெயில் கண்ட பனியாய்....

முக்கனிகளோடு
முத்தமிழும் சேர்த்து
இனிய வார்த்தைகளை
முக நகையோடு கோர்த்து...
வாழ்த்தி வரவேற்போம்....
வரவேற்று வாழ்ந்திடுவோம்...

No comments:

Post a Comment