Tuesday, March 23, 2010

இழந்தது மனிதம் மட்டும்.....

காக்கை இட்ட எச்சமாய்
கவனிப்பாரற்று கிடக்கிறது மனிதம்....

சிதறி கிடக்கும் பிணக்குவியலில்
உறைந்த ரத்தத்தின்
ஒவ்வொரு துளியிலும்
விரவிக்கிடக்கிறது
பகையின் வீச்சம்...

கடந்து போகும் காற்று கூட
கண்ணீர் விடுகிறது....
மனிதத்தின் நிலையை எண்ணி....

மகரந்தம் சொரியும்
மலர்கள் கூட கந்தகபுகையால்
கருகி கிடக்கின்றன..........

இறந்த உயிர்களின்
திறந்த கண்களூடே
நிறைந்து கிடக்கிறது
எதிர்கால ஏக்கங்கள்....

கடந்த நொடிகளில் நடந்தவை கண்டு
மௌனித்து போன சுற்றுப்புறத்தை
ஊடறுக்கிறது ஓர் ஓலக்குரல்..

இழந்ததும் அடைந்ததுமாய்
எண்ணிப்பார்க்கையில்
அடைந்தது எதுவுமில்லை.....
இழந்தது மனிதம் மட்டும்.....

No comments:

Post a Comment