Wednesday, November 16, 2011

உள்ள வயலினிலே......

உள்ள வயலினிலே
உணர்வு ஏரோட்டி
கனவுச் செடி நட்டு
கற்பனை நீர் பாய்ச்சி
துளிர்க்கும் காலத்திற்காய்
ஆவலோடு காத்திருந்தேன்

மெல்ல துளிர்த்ததடி
மேனியெங்கும் சிலிர்த்ததடி
அரும்புகள் மலரும்போது
ஆசைகள் பெருகுதடி
அதிசயம் பாரென்று மனம்
ஆராவரம் செய்யுதடி

மெல்லக் களித்திருந்தேன்
மெதுவாக தவித்திருந்தேன்
மலரும் மொட்டைக்கான
மௌனமாய் தவமிருந்தேன்
மொட்டும் மலர்ந்ததடி
முகம் பார்த்து சிரித்ததடி

மலர்ந்த ரோஜாக்கள்
மணம் பரப்பி அழைத்ததடி
பறித்தால் வலிக்குமென்று
பார்வையோடு விடுத்திருந்தேன்
வண்ணங்கள் சிறந்திருக்க என்
எண்ணங்கள் தாரைவார்த்தேன்

முட்கள் குத்துதென்று
ரோஜா முனகியது
பறித்தால் வாடுமென
மனமோ தயங்கியது
உதிர்ந்ததடி ரோஜா
உறவான செடி நீங்கி...

முட்கள் குத்தியது
ரோஜாவிற்கு பிடிக்கவில்லை
முட்களை நீங்கி வாழ
செடிக்கும் விருப்பமில்லை
ரோஜா மாலையானது
செடியும் மொட்டு விட்டது

கண்ணின் இமை போல
காரிருள் நிலவு போல
தாய்க்கு தலைச்சன் போல
எண்ணி வளர்த்த நானோ
ஏங்கி தவித்திருந்தேன்
தவித்து தனித்திருந்தேன்.............

No comments:

Post a Comment