Wednesday, November 16, 2011

நீ.....

ஆதி நீ
அந்தம் நீ
அடக்க முடியா
ஜோதி நீ

வேதம் நீ
விதியும் நீ
விண்ணை வெல்லும்
மதியும் நீ

ஞானம் நீ
யோகம் நீ
ஞாலம் கடந்த
காலம் நீ

ஊனும் நீ
உயிரும் நீ
இடையில் இயங்கும்
உணர்வும் நீ

கனவும் நீ
நினைவும் நீ
கண்ணில் விரியும்
காட்சி நீ

இரவும் நீ
பகலும் நீ
இடைவெளி இல்லா
பருவம் நீ

கர்வம் நீ
கடமை நீ
என் காதல் தேடிய
காதலி நீ

அன்பும் நீ
பண்பும் நீ
வாழ்விற்கான
அர்த்தம் நீ

வானும் நீ
மண்ணும் நீ
இடையில் உலவும்
வளியும் நீ

இன்பம் நீ
இனிமை நீ
எனக்காய் பிறந்த
யாவும் நீ.......

No comments:

Post a Comment