Wednesday, November 16, 2011

எதிர்பார்ப்புகளோடு.............

உன் நினைவுகள்....
அணை கடந்த நதி நீராய்....
நீர் வசிக்கும் சிறு மீனாய்...
மீன் ருசிக்கும் பசும் பாசியாய்...
என் மனதின் இரு கரை நெடுக
நிறைந்திருக்கின்றன.....

என் கனவுகள்...
நாம் கடக்கும் சாலையாய்
சாலையிடையே வரும் சோலையாய்...
சோலை கொண்ட சுவைகனியாய்..
என் வாழ்வின் நீளமெங்கும்
காத்திருக்கின்றன....

என் ஆசைகள்...
இதம் தரும் மாலையாய்...
மாலை வரும் நிலவொளியாய்..
நிலவொளியில் மலரும் அல்லியாய்....
என் இளமையின் தேகமெங்கும்
மணந்திருக்கின்றன.....

என் ஏக்கங்கள்.....
எல்லையில்லா பாலையாய்...
பாலை கொண்ட கோடையாய்...
கோடை தரும் தாகமாய்...
என் நாட்களின் நகர்வுகளில்...
வழிந்திருக்கின்றன....

என் தாபங்கள்.....
இதழ் விரித்த மலராய்...
மலர் கொண்ட தேனாய்...
தேன் சுவைக்கும் வண்டாய்....
என் காதலெங்கும் மௌனங்களாய்..
விரிந்து கிடக்கின்றன....

இன்னும்....
ஒவ்வொரு உணர்வுகளும்
இயற்கையோடியைந்தே..
இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன்...
ஒரு நாள் உன்னில் உய்யலாமென்ற...
எதிர்பார்ப்புகளோடு..............

No comments:

Post a Comment