Wednesday, November 16, 2011

எப்படிச் சொல்ல...???

உறைந்த கோப்பைக்குள்

உருகும் ஐஸ்கிரீமாய்..

திடமாயிருக்கும் எனக்குள்

திமிராயிருக்கிறது

உன் காதல்........



வளைந்த குளத்தில்

நிறைந்த நீராய்...

திறந்த என் மனதில்

நிறைத்திருக்கிறது

உன் நினைவுகள்.....



கனவுகளில் உனைக்கண்டு

களித்துக் கதை பேசி

காலையில் விழிக்கும் போது

கண்களில் புன்னகையோடு என்னெதிரே

உன் நிழற்படங்கள்....



இதையெல்லாம் தாண்டி

உண்ணும்போது புரையேறுகையில்

உன்னை யாரோ நினைக்கிறார்கள்

என அம்மா சொல்ல

நினைப்பது நீதான்

என எப்படிச் சொல்ல...???????

No comments:

Post a Comment