Wednesday, November 16, 2011

என்னைத் தொலைத்த நான்..

கண்ணாரப் பார்த்து..
காதாறப் பேசி...
கைகோர்த்து நடந்து
நாம் காதலிக்கவில்லை....

வருகைக்காக காத்திருந்து..
வந்த பின ஊடல் கொண்டு..
நடைபாதைப் பூங்காக்களில்
நாம் மகிழ்ச்சி விதை தூவவில்லை....

உனக்காக அலைந்திருந்து..
உனக்காக தேர்வு செய்து..
உனக்காக ஒரு பரிசை
நான் ஒரு பொழுதும் தந்ததில்லை...

உன்னுடைய நலனைத் தவிர..
உனக்கான மதிப்பைத் தவிர...
நமக்கான காதலில்
வேறெதுவும் நாடவில்லை....

நானுனக்கு ஒரு சில
உதவாக் கவிதைகளும்
சில பல கண்ணீர்த்துளிகளையுமே
கையளித்திருக்கிறேன்....

இன்றோ.....
தாய்க்கு ஏங்கும் பிள்ளையாய்
அலைமோதிக் கொண்டிருக்கிறேன்...
அனல் மீது நின்று கொண்டிருக்கிறேன்...

தொடுக்கப்பட்ட
என் கேள்விகளுக்கு
புறக்கணிப்பையே பதிலாக்கி
போய்க்கொண்டிருக்கிறாய்...

இன்னும் சில கவிதைகளும்
ஏராளமான கண்ணீர்த்துளிகளும்
உன்னிடம் ஒப்படைக்கவே
என் கணக்கில் இருக்கின்றன

என்ன செய்ய....???
கண்ணீர்த்துளிகளாலேயே
கடந்த காலங்களை கழுவிப் பார்த்தும்
விடை தெரியவில்லையே..???

ஆசைப்பட்ட பொம்மையைத்
தொலைத்த் குழந்தையாய்..
என்னைத் தொலைத்த நான்..
கண்ணீரோடும் அதில் நிறைந்த காதலோடும்......

No comments:

Post a Comment