Monday, November 16, 2009

உறக்கத்தின் இடைவெளியில்
உன்னதமாய் ஒரு கனவு............
என்னை நாடி நட்பு கடவுள் வந்தார்
நட்பு கடவுளிடம்
நான் கேட்டேன்
நல்ல நண்பனை பெற
நான் என்ன செய்ய வேண்டும் என..........
அவர் சொன்னார்
ஐம்புலனைத் தவிர்த்து விட்டு
ஆறாம் புலனாய் அன்பை வை......
உன் இதய வீட்டில்
புன்னகை பந்தலிட்டு
நம்பிக்கை தோரணம் கட்டு.....
உங்களிருவருக்குமிடையே
மன்னித்தலே தட்சணை
மறத்தலே பரிசு
பரஸ்பர புரிதலே உறவு
விட்டு கொடுத்தலே விருந்து
தட்டி கொடுத்தலே மருந்து.....
நல்லதை விதைத்தால்
நல்லதே விளையும்
நீ நல்ல நண்பன் எனில்
நல்ல நட்பே அமையும்......
விழித்து பார்த்தேன்
நட்பாய் நீ....
புன்னைகையோடு........

No comments:

Post a Comment