Monday, November 16, 2009

முகமறியாத தோழமைக்கு
முதலும் முடிவுமான வணக்கங்கள்...
என்னைப்பற்றி உங்களின்
உயர்வான எண்ணங்களுக்கு
கோடி நன்றிகள்....
நட்பு குளத்தின் கரையில்
நடந்த சுவடுகளாய்....
உன்னுடனான உரையாடல்கள்
உள்ளமெங்கும் விழிநீரின் ஈரத்தொடே
வியாபித்திருக்கின்றன......
யார் கண்ணிலும் படாமல்..
சுவடுகள் கால வெள்ளத்தில்
மறைக்கப்படலாம்
ஆனால் சுவடுகளை சுமந்த மண்
என்றும் மறக்காது..........
மண் போலவே நானும் என் நட்பும்
மறைக்கப்பட்டாலும் உன் நினைவுகளை
மறக்கமுடியாது......
கால வெள்ளத்தின் கரையில்
ஏதோ ஒருவிடத்தில்
காத்திருப்பேன்....
உன் நட்புக்காக...
அதுவரையிலும்....
புன்னகையோடு பூத்திருப்பேன்
நாணலாக.............
நன்றி வணக்கம்...

No comments:

Post a Comment