Monday, November 16, 2009

மலர் மலரும் என்றுதான்
மனம் நினைத்தது.......
உதிரும் என்று யார்
எதிர் பார்த்தது........
வான் கடந்து
வெளி கடந்து
தொடரும் நட்பென்றுதான்
நான் நினைத்தேன்....
முகம் கடந்து
மொழி கடந்து
இதயம் தொடும் என்றுதான்
எதிர் பார்த்தேன்....
வலி கொடுத்து
சிறகொடித்து
நீ ரசிக்க நான் நொந்தேன்.......
நிலவின் நீங்காத கரையாய்
மனதின் ஆறாத வடுவாய்
மாறிப்போனதே நட்பு..........
புரிதல் எளிதல்ல
புரிந்தபின் பிரிதலும் எளிதல்ல.......
வரமாய் தேடிய நட்பு
சாபமாய் மாறிய
நிமிடங்களே
நான் இறக்கும் வரையிலும்
இறக்க முடியா சுமையாய்
இதயத்தில் இடம் பிடித்திருக்கும்...
இந்நாள் வரையிலும்
இதம் கொடுத்த
தோழமைக்கும்
இன்று
இனம் காணா பிரிவினைக்கும்
என் நன்றிகள்
போகிறேன் வணக்கம்........

1 comment: