Monday, November 16, 2009

உண்ண உணவுண்டு
உறங்க வீடுண்டு
வீண் கதைகள் பேசி
வில்லங்க சண்டையிட
வீடு தோறும் திண்ணையுண்டு

எண்ணம் பலவுண்டு
உண்டு களித்தே
உறங்கி கிடந்தாலும்
வானேறி நிலா தாண்டி
விண்ணாள ஆசையுண்டு

சோம்பேறியானாலும்
சுக வாழ்வு வாழ
குறுக்கு வழி சூத்திரங்கள்
கொண்டிருக்கும் சாத்திரங்கள்
தேடும் ஆசை உண்டு

நல் வழி போய்
நாயினும் கீழாய்
அல்லும் பகலும்
அலைந்தே திரிந்தாலும்
கிட்டுமா வெற்றி ?????

கேட்கின்ற இளைஞனுக்கு
கூறும் விடை தெரியாமல்
குழம்புகின்றேன் நான்
விடை தேடி போகிறேன்
கிடைத்தால் திரும்புவேன்

அதுவரை பொறுத்திருப்பீர்
ஆனவரை காத்திருப்பீர்
மண் கொண்டு மூடி விண்தாண்டி வீசினாலும்
உண்மை ஒருநாள் உறக்கம் விழிக்கும்
இவ்வுலகை ஜெயிக்கும்.................

No comments:

Post a Comment