Monday, November 16, 2009

என் நட்புக்குளத்தில்
கல்லெறிந்தவர்களுக்கு.......

விழுந்த கல்லினால்
எழுந்த நீர்த்துளிகள்
உங்கள் மேல் பட்டிருக்கலாம்
அது என் தவறல்ல
நட்பின் தவறு.........

நனைய மறுப்பவர்கள்
மழையை உணர முடியாது
அது போலவே
நட்பையும்.......................

வானம் என்பது
வெகு தூரத்திலில்லை
நம் தலைக்கு மேலேதான்
அதுபோலவே நட்பும்
வேறெங்கும் இல்லை
நமக்கிடையேதான்.........

நம் நட்பெனும் மரத்தில்
நானுமொரு கிளையாய்
பூவோடும் காயோடும்
பூத்துக்குலுங்க விரும்பவில்லை
வேராய் இருக்கவே
விரும்புகிறேன்.........
வேறாய் எண்ணவில்லை....

உனக்குமெனக்குமான
உரையாடல்கள்
நமக்கு சொல்கிறது
நம்மைப்பற்றி
நம் நட்பை பற்றி....

பகர்வது என் நோக்கம்
உணர்வது உன் விருப்பம்
எதுவாயினும்
ஏற்றுக்கொள்கிறேன்
புன்னகையோடே......

No comments:

Post a Comment