Monday, November 16, 2009

உயிரே

உன் கண் சிமிட்டல்களே
கவிதைகளாய்
உன் இதழசைவுகளே
இலக்கியமாய்
கொண்டிருக்கிறேன் நானிங்கு

அருகில் வந்தால்
அரும்பி கொல்கிறது வெக்கம்
விலகிச் செல்லும்
பொழுதுகளிலோ
வெறுத்து போகிறது வாழ்க்கை

கருப்பு வெள்ளை
கனவுகளில்
நீ மட்டுமே நிர்மலமாய்
விலக்க நினைத்தாலும்
விலக்க முடியாத நிழல் போல

என் செய்ய
நினைவும் நிஜமும்
எதிரெதிராய்
விளையாடுகையில்
தவிப்பதை தவிர.......

No comments:

Post a Comment