Monday, November 16, 2009

என் கண்கள் காணும் கனவுகளில்
நீ மட்டுமே நிரந்தரமாய்.
விழி திறந்தால் காட்சியாய் நீ
விழி மூடினால் கனவாய் நீ
என் அர்த்தமில்லா மௌனத்திற்கு
ஆதாரமாய் உன் நினைவுகள்.
என் சிரிப்பிற்கு பின்னால்
சிறகடிக்கும் நம் கனவுகள்.
என் கவிதையெனும் கருப்பையில்
கருவாய் நீ.
என் காதலெனும் வகுப்பறையில்
பாடமாய் நீ.
என் உறவுகளின் வழிமொழியில்
பேதையாய் நீ.
என் உணர்வுகளின் கருவழியில்
ராதையாய் நீ.
ஆனால் பெண்ணே
நம் காதலெனும் ரயிலுக்கு
தண்டவாளங்களாய் நாம்.
இணைந்தாலும் பிரிந்தாலும்
கவிழ்ந்துவிடும் நம் காதல்.
என் நினைவுகளில் உதிர்ந்த மலரே......
கனவுகளிலாவது மலர்ந்து மணம் வீசு.........
மகிழட்டும் நம் காதல்

No comments:

Post a Comment