Monday, November 16, 2009

தோழமைக்கு............

தாயின் கருவிலுருந்து
தந்தையின் தோள் வரை
தன்னிலை மறந்து
தவழ்ந்திருந்ததொரு காலம்.......

ஆரம்பப்பள்ளிக்கு
அகரங்கள் படிக்க
அழுதபடி செல்ல
அடம்பிடித்ததொரு காலம்......

சின்ன சின்ன சேட்டைகளோடு
செல்ல சண்டைகளோடு
பள்ளி நண்பனோடு
பயின்றிருந்ததொரு காலம்......

விடலைப் பருவத்தின்
விவேகமில்லா வேகத்தில்
என்னை மீறி ஏதுமில்லையென
இறுமாந்திருந்ததொரு காலம்........

கல்லூரி பருவத்தில்
தவிர்க்கவியலா ஈர்ப்புகளில்
தயக்கங்களோடே
தவித்திருந்ததொரு காலம்......

கையில் பட்டத்தோடு
கண்ணில் கனவுகளோடு
வேலை தேடித்தேடி
விரக்தியோடிருந்ததொரு காலம்.....

வேலை கிடைத்தபின்னர்
தூய நட்பு தேடி
கானலைக் கடலென்றே
கண்ணயர்ந்ததொரு காலம்.....

பருவ நிலைகள் தாண்டி
ஆண் பெண் பேதங்கள் நீக்கி
அரவணைக்கும் நட்புக்காக
அலைபாய்ந்ததொரு காலம்....

காலங்கள் கரைகின்றன
கனவுகள் நிறைகின்றன
காத்திருக்கிறேன்
நான் தேடிய நட்புக்காக..................

No comments:

Post a Comment