Monday, November 16, 2009

மழை நனைத்து போன
மரங்களை
தலை துவட்டி போகும்
காற்று போலவே
எனை தீண்டி போகிறது
உன் காதல்...

கை கோர்த்து நடந்த போதும்
விழி கடந்து போகும் போதும்
மனம் திறந்து
கனம் கரைத்து போகிறது
உன் காதல்...

சிலை மேவும் உளி போலவே
உன் வழி மேவும் என் விழிகள்
வரும் போதும்
போகும் போதும்
தயக்கமாய் நெருங்கி வந்து
தாவலோடு திரும்பும் அழகை காண...

தவிர்க்கவியலா தருணங்களில்
விவரிக்கமுடியா புன்னகையோடு
கடந்து போகிறாய் எனை தாண்டி
கனத்த மௌனத்தோடு
கண்ணில் ஏக்கத்தோடு
விழுந்து கிடக்கிறேன் நான்
நீ நடந்த வீதியெங்கும்.............

No comments:

Post a Comment