Monday, November 16, 2009

நிலவுலவும் வானமதில்
என் நினைவுலவும் நேரம்.....
இரு விழியின் இமை நடுவே
என் கனவுலவும் காலம்........
உருகி வரும் அருவியிலே
தலை நனைக்கும் நேரம்.........
குளிர் காற்றின் நடுவினிலே
நான் எனை மறக்கும் காலம்.........
தெள்ளு தமிழ் பாட்டு
என் செவி நிறைக்கும் நேரம்......
நள்ளிரவின் கருமையிலே
நான் எனை தொலைக்கும் காலம்.....
நல்ல சொல் தேடி
நடை போடும் நேரம்.......
உள்ளமதில் கவிதை வரி
ஊற்றெடுக்கும் காலம்......
இவையனைத்தும்
மறந்ததடி நான்
உன்னை நினைத்த நேரம்.........
உள்ளமது தவிக்குதடி
உன்னை காணாத காலம்......

No comments:

Post a Comment