Monday, November 16, 2009

என்னவளுக்கு,
எனக்கு பிடித்தவையில்
எதுவுமே உனக்கு பிடிக்கவில்லை.
உனக்கு பிடித்தவையில்
ஒன்றில் கூட எனக்கு ஆர்வமில்லை.
வாசிப்பதில் துவங்கி வசிப்பதுவரையில்
உனக்கும் எனக்கும்
ஒற்றுமையில்லை.
வண்ணத்தில் துவங்கி
எண்ணங்கள் வரையிலும்
துருவங்களைபோலவே
எதிரும் புதிருமாய்
ஆனாலும் என்ன?
இருவருக்குமான இடைவெளியில்
நிரம்பியிருக்கிறது
உன் மீதான என் காதல்.
அந்த காதலைப்பற்றி
இந்த ஏழையின் குடிசையில்
நிரம்பியிருக்கும் காற்று கூட சொல்லும்
கவிதைகளாய்...................................

No comments:

Post a Comment