Monday, November 16, 2009

தோழமைக்கு,
பருவ மழையின் சாரல்களுக்கிடையே
நீண்ட சாலையின் இருபுறமரங்களின் நடுவே
நடந்து போகிறேன் நம் நட்பின் நினைவுகளோடு
மழை நின்றபின்னும் விழும் மரங்களின் துளிகளாய்...
நீ பிரிந்து போன பின்னும் உன் நினைவுகள்.....
முகம் மோதும் தூய காற்றாய்
என் மனம் மோதும் உன் தூய நட்பு.....
தூரத்து வானமாய் நீ
தொடர்ந்து வரும் மேகமாய் நான்
என்று தொடுவேன் எனக்கு தெரியாது
ஆனாலும் தொட்டு விடும் நம்பிக்கையில்தான்
தொடர்கிறது என் பயணம்..................
உன்னை நோக்கி.........

No comments:

Post a Comment