Monday, November 16, 2009

நிஜங்களை தவிர்த்து விட்டு
நிழல்களில் தேடுகின்றேன்....
வீட்டுக்குள் வைத்து விட்டு
வீதிகளில் தேடுகின்றேன்

உணர்வுகளை உருக்கி வைத்து
உள்ளத்தில் ஒளியேற்றி
இமைமூடி மனம் திறந்து
இன்னும் பல செய்து

எது செய்யினும்
இயலாததாய் இங்கே ஓர் நட்பு

இதயத்தை திறந்து வைத்தேன்
இங்கிதத்தை தெளித்து வைத்தேன்
உணர்வுகளை ஒதுக்கி வைத்தேன்
உள்ளன்பு கைக்கொண்டேன்

நகுதல் மட்டுமன்று
அவ்வப்போது நாணுதலும்
இருக்குமென்று எண்ணியே
நானும் வந்தேன்

நகுதலும் உண்மையில்லை
நாணுதலும் தேவையில்லை
பொய்யோடு பலவினைகள்
புரிதலே போதுமிங்கு

அன்பு தேவையில்லை
அறிவுரைக்கோ இடமேயில்லை
பண்பு தவறினாலும்
பதறுவார் யாருமில்லை

என்ன செய்ய
நண்பர்களை தேடவந்து
நட்பையே தேடுகின்றேன்
மீண்டும் மீண்டும்.....

No comments:

Post a Comment