Tuesday, March 23, 2010

என்றாவது ஓர் நாள்.............

என் கண் வழியே வழிவது
கண்ணீர் அல்ல பெண்ணே.......
உன் மீதான என்
அளவில்லா காதல்..........

ஓராயிரம் புன்னகைகள்...
ஓராயிரம் வார்த்தைகள்...
ஓராயிரம் பரிசுகள்...
இவை யாவும் உணர்த்தவில்லை.....

ஒற்றை கண்ணீர் துளியே
முழுதாய் உணர்த்தியது
என்னுள் இருக்கும் உன்னையும்
உன் மீதான என் காதலையும்.....

உன்னை பற்றி மட்டுமே
சிந்திக்கிறது மனம்
கடிவாளம் இட்ட
குதிரையாய்.....

உன்னை புரிந்த
என் இதயத்திற்கு
உன் சூழ்நிலை புரியவில்லை...
சொன்னாலும் கேட்கவில்லை....

காயங்களை கீறி
அதில் தெறிக்கும்
வலிகளை...கண்ணீரை ..
ரசிக்கிறது மனம்.......

என் செடியின்
வண்ண ரோஜா நீ
என் முட்கள் உன்னை காயப்படுத்தவே
முனைப்பாய் இருக்கின்றன........

தாயின் கருவறை...
இறுதியின் கல்லறை
இரண்டுக்கும் இடையே
உன் இதய அறை......

நினைவு வேலியிட்டு
அடை காத்து வா....
என் காதலை......

என்றாவது ஓர் நாள்

பொரிக்க கூடும்
என் காதலும் கனவுகளும்
கலந்த
என் கவிதை குஞ்சுகள்......

என் இதயத்தை
கண்ணீரால் கழுவி
கவிதைகளால்
அலங்கரித்து

காதலால் பூஜிக்கிறேன்
நீ அதில்
இருப்பதால்

No comments:

Post a Comment