Tuesday, March 23, 2010

என் கிராமத்து நாட்கள்....

இனிய குருவிகளின்
இன்னிசையோடு
மெல்ல விடிந்திருந்தன
என் கிராமத்து நாட்கள்....

கரையோர நடையோடு
கருவேலங்க்குச்சி பல்துலக்கல்
அரப்பு வைத்த தலையோடு
கிணற்றடி குளியல்.....

திசையெங்கும் வீற்றிருக்கும்
தெய்வங்களின் தரிசனத்தோடு
பசியையும் ரசித்தவாறே
பறவைகளுடனும் பக்கத்துடனும்
பகிர்ந்துண்ணல்......

நுங்கு வண்டிப் பந்தயங்கள்
மாட்டு வண்டிப் பயணங்கள்
வெற்றிலை சிவப்போடு
வெள்ளந்திப் புன்னகைகள்...

அரச இலைப் புல்லாங்குழலோடு
ஆற்றங்கரை விளையாட்டுக்கள்
ஊர்த்திருவிழாவில்
உறவுகளோடு உலாவல்....

வெட்டுக்குத்து இல்லாமல்
எந்த விழாவும் நிறையவில்லை
ஆனாலும் ஊர்ப்பாசம்
குறையவே இல்லை...

ம்ம் என்ன செய்ய....

நினைவுகள் மட்டுமே
இனிக்கின்றன என் கிராமம் போல
நிஜங்கள் எப்போதும்
கசக்கின்றன
உங்கள் நகரம் போல...

No comments:

Post a Comment