Tuesday, March 23, 2010

என் வாழ்வின் தேவைகளை.....

அதிகாலை சிட்டுக்குருவியின் இன்னிசை...
தட்டில் வந்து கொத்தித்தின்னும் காக்கா...
அழகாய் அசைபோடும் பண்டங்கள்....
அமைதியாய் இருக்கும் என் கிராமம்....

வரி வரியாய் உழுதுவிட்ட காடுகள்..
வரப்பின் மேல் தவமிருக்கும் நாரைகள்...
காற்றெல்லாம் மணம் பரப்பும் பூக்கள்...
நிலமெல்லாம் நிழல் பரப்பும் மரங்கள்....

ஊரெல்லாம் ஓய்வெடுக்கும் சாவடி...
அனல்பறக்கும் ஆடு புலி ஆட்டம்....
விளையாடிக் களித்திருந்த புழுதிக்காடு....
களைப்போடு கண்ணயர்ந்த மாமரத்தடி...

வளையோடு வேய்ந்திருக்கும் எனது வீடு....
நான் உண்டுறங்கி வளர்ந்திருந்த வீட்டுத்திண்ணை.....
அவசர தேவைகளுக்கு அண்ணாச்சி மளிகைக்கடை...
அவசர உதவிக்கு அடுத்த வீட்டு அப்பத்தா....

அம்மா கைபட்ட அதிரசம்...
அத்தை அன்போடு சுட்டுத்தந்த நெய்முறுக்கு.....
பாசத்தோடு பறிமாறிய பழையசோறு....
நேசம் நிறைந்திருந்த நீர்மோர்......

எங்கு தேடியும் கிடைக்கவில்லை நகரத்தில்....
என்ன செய்ய....
வாழ்வின் தேடல்கள் கிராமத்திலும்
வாழ்வின் தேவைகள் நகரத்திலுமாய்.....

புன்னகை மறைத்த பொய்களோடு
இதயம் தொலைத்து தேடுகிறேன்...
தேடல்களை தவிர்க்க வைத்த
என் வாழ்வின் தேவைகளை.....

No comments:

Post a Comment