Tuesday, March 23, 2010

மௌனமாய் இரு...

மௌனமாய் இரு...

புத்தனை போல...
புன்னகை தவழ....

உன்
உள்ளத்தின்
வார்த்தைகள்
உதடுகளை
தாண்ட விடாதே....

அவை
உன்னைபற்றியாயினும்
உன்னோடிருப்பவரை பற்றியாயினும்..

நன்மையோ? தீமையோ?
நாவை அடக்கிக்கொள்...
அது
நன்மையே பயக்கும்.....

நிறைவேறாத ஆசைகளை
நினைவுபடுத்தாதே...
அது
நிம்மதியை
குலைத்து விடும்.......

மீனுக்கு உணவு
புழுக்கள்தான்
என்றாலும்
தூண்டிலில் இருக்கும் போது
அவையே
எமனாகவும் மாறக் கூடும்...

அது போலவே
ஆசைப்படு தவறில்லை...
ஆனால்...
ஆசைகள் நிறைவேறும் என்றால் மட்டும்....

இல்லையெனில்...
ஆசைப்பட்ட காரணத்தினாலே
அசிங்கப்பட்டும் போவாய்...

கவனம்
மௌனம்
சிறந்த மருந்து
மனதின் காயங்களுக்கு......

No comments:

Post a Comment