Tuesday, March 23, 2010

வேங்கைகளின் மைந்தர்களுக்கு...

நிகழ்கால நெருடல்களுக்குள்
எதிர்கால ஏக்கங்கள்
புதைந்திருக்கலாம்....

இறந்த கால கனவுகளில்
சில எப்போதோ
சிதைந்திருக்கலாம்....

சூழ்நிலைக்கு தக்கவாறே
சுய நம்பிக்கை
தளர்ந்திருக்கலாம்...

உதவுவார் யாருமின்றி
உலகமே
தனித்திருக்கலாம்....

நாயினும் கீழாய்
நம்மை சிலர்
மதித்திருக்கலாம்....

தன்மானம் தவிர்த்த சிலர்
நம்மைவிட்டு
பிரிந்திருக்கலாம்....

வேலிகளுக்கிடையே
சில வரலாறுகள்
முடக்கப்பட்டிருக்கலாம்....

எதுவானால்தான் என்ன????
நீயும் நானும்
உயிருடன்தானே இருக்கிறோம்...

விருட்சங்கள் தாங்கும்
விதைகளாய்
கடமைகள் தாங்கி நிற்போம்....

வருந்திய வரலாறுகள்
திருந்தும் வரை
வா இணைவோம்....

No comments:

Post a Comment