Tuesday, March 23, 2010

உன் வார்த்தையின் வருடல்களுக்காக......

உனக்குமெனக்குமான
கடந்த கால உரையாடல்கள்
ஒவ்வொரு முறை படிக்கும்போதும்
ஒவ்வொரு அர்த்தத்தை தருகின்றன......
என் மன நிலைக்கேற்றவாறு.........

நீயும் நானும்
சராசரிகளின் மீதங்களாகவே
சந்தித்துக் கொண்டோம்...
என்றாலும்...
எங்கோ தவறிய ஒரு நொடியில்
சரி பாதியாய் மாறி விட்டோம்......

அப்படி என்ன இருக்கிறது
எனக்கும் உனக்குமான
இந்த காதலில்...???????

வார்த்தைகள் வக்கிரப்படவில்லை
மாறாக வசீகரிக்கின்றன....

விருப்பங்கள் நிறைவேறா விட்டாலும்
பரஸ்பர புரிதலோடு
பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.....

உன்னை சந்திக்குமுன்...
என் கனவுகளில் உயிர் வாழ்ந்தேன்....

உன்னை சந்தித்த பின்னரோ
உன் நினைவுகளில் மட்டுமே
வாழ்கிறேன்............

சுகங்களை விட
ஏக்கங்களின் வலியே அதிகம்
என்றாலும்...
தருவது நீயென்பதால்
புன்னகையோடு...
என் இமைவழியும் நீரை
உள்ளிழுக்கிறேன்.......

சராசரி என்றால்
சண்டையாவது போடலாம்
நீ என் சரிபாதி ஆயிற்றே..
என்ன செய்ய....

கண்ணீர்க் குளத்தில்
கண்களை நீந்த விட்டு
கனவுகளுக்கு வலை விரித்து
காத்திருக்கிறேன்.....

வாய் மூடி இருக்கிறேன்
வலிகளோடு...
எப்பொழுதாவது
கிடைக்கும்
உன் வார்த்தையின்
வருடல்களுக்காக......

No comments:

Post a Comment