Tuesday, March 23, 2010

நாய்க்குட்டி மனது.....

புன்னைகைக்கும்
உதடுகள் தெரிவிக்கவில்லை...
உள்ளத்தின் வலிகளை...

கனக்கும் மனத்தின்
வாயில்களாய்
கண்கள் மட்டுமே
கலங்கிக் கொண்டு.........

நிஜங்கள் தந்த
வலிகளை விட
உன்
நினைவுகள் தந்த
வலிகள்
கொடுமையானவை...............

இப்படியிருந்திருந்தால்.........
என்
இழந்த தருணங்களுக்காக
ஏங்குகிறது மனது......

நாய்க்குட்டி மனதுதான் எனது..
எச்சத்தை எவர் போட்டாலும்
தின்றுவிட்டு
வலாட்டிக்கொண்டே
பின்னால் போகிறது
விரட்ட விரட்ட..................

எச்சமிட்டவருக்கு
தெரிந்திருக்கலாம்...
நாய்க்குட்டியின் மனது

நாய்க்குட்டிக்கு தெரியமா ?
எச்சமிட்டவரின் மனது??

எங்கோ எறிய வேண்டிய
மிச்சத்தை
இங்கே எறிந்தார் என்று......

எறிந்ததும் குற்றமில்லை..
தின்றதும் குற்றமில்லை..
வாலாட்டிக்கொண்டே
போனதுதான் குற்றம்......

என்ன செய்ய....
நாய்க்குட்டி
என்றுமே...
நாய்க்குட்டி தான்........

No comments:

Post a Comment