Monday, March 22, 2010

நானும் என்னோடு மழை நாட்களும்.....

என்னவளுக்கு....
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
உனது முகவரி....

என்றோ ஓர் மழை நாளின்
மதியத்தில்....
மழை நீரின் குளுமையோடு
எனைக்கடந்து போனாய் நீ...

அன்றோடு
மண் சேர்ந்த மழை நீராய்
நான் மாறிப்போனேன்...

மழையோசை மீறிய
உன் வளையோசைகள்
ஒலித்துககொண்டே இருந்தன
நீ போன பின்னும்....

எங்கோ திரிந்திருந்த
என் நினைவுகள்
உன் மீது
மையம் கொண்டது அன்றிலிருந்து....

அன்று முதல்
எல்லா மழை நாட்களிலும்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்...

நீ என்னை கடந்து
போவாய் என்ற நம்பிக்கையில்...

வருடங்கள் ஓடியது
வயோதிகம் கூடியது
நிகழவேயில்லை உன் வருகை...

ஆனாலும்
காத்துக்கொண்டிருக்கிறோம்
என்றேனும் நீ வருவாய்
என்பதற்காக

நானும்
என்னோடு
மழை நாட்களும்.....

No comments:

Post a Comment