Monday, March 22, 2010

நன்றி பெண்ணே(?)....

நன்றி பெண்ணே(?)....
அனைத்திற்கும் நன்றி...

இதயம் சிதைத்த காதலுக்கு நன்றி...
இரவை வெறுத்த உன் நினைவுகளுக்கு நன்றி...
பகலைத் தொலைத்த உன் பாசத்திற்கு நன்றி...
பாராமுகமாய் நீ போவதற்கும் நன்றி....

கனவுகளை வளர்த்த உன் கண்களுக்கு நன்றி..
கவிதைகள் விதைத்த உன் வார்த்தைக்கு நன்றி...
காலம் கடந்த உன் அன்பிற்கு நன்றி....
கண்மூடி இன்று போவதற்கும் நன்றி.......

என் காதலை களங்கப் படுத்தியமைக்கு நன்றி...
என் நட்பையே தவறாக்கிய உன் திறமைக்கு நன்றி..
என்னை நம்பிய உன் நம்பிக்கைக்கு நன்றி...
உண்மை உரைத்த உன் உள்ளத்துக்கு நன்றி.....

என்னை இன்று ஊமையாய் செய்ததற்கு நன்றி...
என் மௌனத்தின் பின்னாலான உன் வரிகளுக்கு நன்றி...
காதலெனும் பேரில் நீ தந்த காயத்துக்கு நன்றி...
பொய்யைக்கூட பொருத்தமாய் சொன்னதற்கு நன்றி...

மெல்ல விலகும் இருளுக்கு நன்றி...
என்னை விழித்தெழ வைத்த நொடிகளுக்கு நன்றி...
விருப்பத்தோடு உன்னை வெறுக்க வைத்தாய் நன்றி...
திரும்ப என் வாழ்வில் வராதிருந்தால் கோடி நன்றி....

No comments:

Post a Comment