Monday, March 22, 2010

நீ தந்த காதலோடும்.....

உனக்காக விழித்திருந்த
உறக்கம் தொலைத்த இரவுகள்....

உனக்காக தவித்திருந்த
இரக்கமில்லா பொழுதுகள்....

உன் குரல் கேட்க காத்திருந்த
என் கேட்காத செவிகள்....

உன் முகம் பார்க்க ஏங்கியிருந்த
என் பார்வை இல்லா விழிகள்........

உணவு தவிர்த்த பொழுதுகளில்
உன் நினைவு மட்டுமே.....

என் செய்து என்ன??????
நீயும் நானும்....
நீண்ட தொலைவுகளிடையேயும்
நீங்காத நினைவுகளிடையேயும்....

போதும் பெண்ணே...
இந்த பொல்லாத காதல்...

வலிகளை தாங்குவேன் என்றாலும்
வலிகள் மட்டுமே
வாழ்க்கையல்ல........

கனவுகள் கருக்கொள்ளும் போதே
கலைக்கப் படுகின்றன...

நிறைவேறாத ஆசைகளிடையே
நிறைந்து கொண்டிருக்கிறது..
உனக்கான என் பொழுதுகள்...

நீ தந்த காதலோடும்.....
நான் கொண்ட ஏக்கத்தோடும்......

No comments:

Post a Comment