Monday, March 22, 2010

பின்னிசையாய்.....

உயர்ந்த மலை ஒன்றின்
உச்சியில்
அமர்ந்திருக்கிறேன் நான்....
புன்னகையோடிய பொய்களின்
ஆடைகளற்று
நிஜங்களின் நிர்வாணத்தோடு....

தலைதடவிப் போகும்
மேகங்களின் வருடலோடு
விழிமூடி ரசித்திருக்கிறேன்
என் மேல் பெய்யும் மழையை...

ஒலிகளற்ற மௌனத்தின்
உன்ன்னதத்தில்
உலகம் மறந்திருந்த நேரத்தில்.......
நடந்தவை அனைத்திற்கும்
மௌன சாட்சியாய் நின்றிருக்கும்
மலையோடு
மனித சாட்சியாய் நானும்.........

பொழியும் மழை
கழுவிப்போகிறது
மனமென்னும் குப்பைத்தொட்டி
சேகரித்து வைத்திருந்த
என் நினைவுகளின் அழுக்குகளை....

உடல்தடவிப் போன
ஊதல் காற்றில்
உயிர் சிலிர்த்த நொடிகளில்
புதிதாய் பிறந்ததாய் உணர்வு...

புதிய நம்பிக்கையோடு
புறப்படுகிறேன்
கீழிறங்கும் வழியெல்லாம்
மலை தாங்கி நிற்கும்
மரங்களின் கிளைகளில்
முளைத்த இலைகளிலிருந்து
விழுகின்றன.....

எனைக்கழுவிப்போன
மழைத்துளிகள்....
என் மனம் பாடும்
பாடலுக்கு
பின்னிசையாய்.....

No comments:

Post a Comment