Friday, August 14, 2015

இழந்த சொர்க்கமே.......

கனவுகளில் கண்டெடுத்த
பாதையொன்றை.....
கவிதைகளால் செப்பனிட்டு
புன்னகைப் பூக்களை
பொழிந்து வைத்தேன்.....

இழந்த சொர்க்கமொன்றின்
இதம் தந்த நினைவுகளின்
மீதத்திற்காய்....
சிற்சில நரகங்கள்
கடந்து வந்தேன்......

ஒற்றை முடி
உடைந்த வளையல்
கற்றைக் கடிதங்கள்
என உனதான எதையும்
ஒளித்து வைக்கவில்லை.....

உதடுதாண்டா புன்னகை
பரிவான மனம்
அன்பான அக்கறை
நேச வாசம் வீசும்
உரையாடல்கள்....

இப்படியாகத்தான்
வெளிப்பட்டது
என் சொர்க்கம்.....

இன்னும்
இன்னும்
என மனம் விரும்பும்
தருணங்களில்
தவிர்க்கப் படுகிறது......

கடமை அழைக்கலாம்
உறவு உறுத்தலாம்
கனவு கைவிடலாம்
நனவு இடித்துரைக்கலாம்
எனினும்......

உனக்கான உன்னுள்
உருவம் பெறா
என் அன்பின்
தவிர்க்கப் பட வேண்டிய
சிலதாய் அன்றி பலதாய்.....

நான் தவிப்பதை
அறிந்தும்
நீ தவிர்க்கலாம்....
பரவாயில்லை....
தவிப்பவனை தவிர்ப்பது
உனக்கு உவப்பே எனில்

நானும்
தவிப்பதை
தவிர்க்கிறேன்......

தவிர்த்தவாறே....
உன்
பார்வைக்
கோட்டுகளிலிருந்து
மறைகிறேன்......

நீயாவது இரு.....
நானில்லா
நிம்மதியோடு......

நானும் இருக்கிறேன்....
இழந்த சொர்க்கமொன்றின்
ஏக்கக் கற்பனையிலும்...
கடந்த பாதையினூடே
களித்த காதலிலும்......

No comments:

Post a Comment