எனக்கான பொழுதுகளில்
மலர்ந்திருக்கும் புன்னகை நீ....
எனக்கான கனவுகளில்
உயிர்த்திருக்கும் ஓவியம் நீ....
எனக்கான உறவுகளில்
தனித்திருக்கும் பெருமை நீ.....
எனக்கான பாடல்களில்
ஒலித்திருக்கும் இசையும் நீ....
எனக்கான கவிதைகளில்
இணைந்திருக்கும் பொருளும் நீ....
எனக்கான வெற்றிகளில்
உழைத்திருக்கும் முயற்சி நீ.....
எனக்கான தோல்விகளில்
எனைத்தேற்றும் தோழமை நீ....
எனக்கான இன்பங்களில்
மகிழ்ந்திருக்கும் இதயம் நீ....
எனக்கான பார்வைகளில்
விழுந்திருக்கும் காட்சி நீ....
எனக்கான தேடல்களில்
என்றும் கிடைக்கா அருமை நீ....
எனக்கான காதலில்
எனைத் துரத்தும் நினைவும் நீ....
எல்லாம் எனக்காக
இருக்கும் உனக்காக.....
என்ன செய்ய
தீவிரமாய் உனை இன்னும்
நேசிப்பதைத் தவிர......???????????
மலர்ந்திருக்கும் புன்னகை நீ....
எனக்கான கனவுகளில்
உயிர்த்திருக்கும் ஓவியம் நீ....
எனக்கான உறவுகளில்
தனித்திருக்கும் பெருமை நீ.....
எனக்கான பாடல்களில்
ஒலித்திருக்கும் இசையும் நீ....
எனக்கான கவிதைகளில்
இணைந்திருக்கும் பொருளும் நீ....
எனக்கான வெற்றிகளில்
உழைத்திருக்கும் முயற்சி நீ.....
எனக்கான தோல்விகளில்
எனைத்தேற்றும் தோழமை நீ....
எனக்கான இன்பங்களில்
மகிழ்ந்திருக்கும் இதயம் நீ....
எனக்கான பார்வைகளில்
விழுந்திருக்கும் காட்சி நீ....
எனக்கான தேடல்களில்
என்றும் கிடைக்கா அருமை நீ....
எனக்கான காதலில்
எனைத் துரத்தும் நினைவும் நீ....
எல்லாம் எனக்காக
இருக்கும் உனக்காக.....
என்ன செய்ய
தீவிரமாய் உனை இன்னும்
நேசிப்பதைத் தவிர......???????????
No comments:
Post a Comment