Friday, August 14, 2015

தவறியவனின் உயில்.........

ருவழியில் பிறந்தேன்...
எந்தை கருவிழியில் வளர்ந்தேன்....
இருவிழியில் ஒரு காட்சியாய்
அம்மையப்பரின்
கனவின் வழி
வாழ்வைக் கண்டேன்.....

உறு வழியும்
உதவா வழியுமாய்..
என்னெதிரில் இருக்கக் கண்டு...
தெரிவின் வழி
தீராமால்
தெருவின் வழி திரியக் கண்டேன்....

இதம் தரும் புகையென்றேன்...
சுகம் தரும் மதுவென்றேன்...
நலம் தரும் பொய்களென்றேன்..
ஒழுக்கமது தவறி நின்றேன்...
ஓதுவதும் வீணென்றேன்.....

கனவுகள் இனிமையென்றேன்...
கற்பனையே களிப்பென்றேன்...
அறிவுதரும் மொழி மறந்தேன்...
நல்ல பொருள் நூல் தவிர்த்தேன்....
நல்லோரின் இனம் மறைத்தேன்....

எல்லாம் கடந்து போக...
இன்றோ...
உறையும் வழியின்றி.
தெருவழி திரியும்
திருவில்லா உருவானேன்....

என்னோரே என்னோரே...
எழில் மிகுந்த மண்ணோரே...
இறை தந்த மறையெல்லாம்..
மறை வகுத்த பொறையெல்லாம்
உறையென உறைவோரே....

இன்றோ நாளையோ...
என்னாவி கூடு களையலாம்...
அன்றேனும் உணருங்கள்...
தவறுபவர்களும் திருந்தக்கூடும்....
திருந்தியதால் வருந்தக்கூடும்....

மன்னிப்பே...
மானுடத்துள்....
மறையாமல் உறையும் இறை.....
மன்னிக்காத மனதில்
இல்லை இறை வகுத்த பொறை......

No comments:

Post a Comment