Friday, August 14, 2015

என் மனமே...ஏகாய் நீ.....

தனிமை நீடித்த
ஒரு வேளையில்
ஏக்கத்தவமிருந்த பொழுதுகளில்
எங்கோ தோன்றிய ஒரு பொறி
தீப்பற்ற..........

என்னுள் எழுந்தன
இவ்வரிகள்.......


காதே நீ கேளாய்...
கண்ணுகத்த காட்சிகளென
உன்னொத்தவர் கூறினும்
காதே நீ கேளாய்.......

வாயே நீ திறவாய்....
உண்மை நிலையென
உன்னுள்ளம் விளம்பிடினும்
பிறர்பற்றிய செய்திகளுக்கு
வாயே நீ திறவாய்....

மனமே நீ வருந்தாய்.....
எதுவரினும்
எவர் விலக்கலிலும்
மனமே நீ வருந்தாய்.....

உள்ளாற உணர்ந்த மழை
உன்னோடு உறவாட
உன்னோடு இருப்பவரை
ஒருபோதும் கணிக்காதே....

என்னுடல் கொண்ட நிழல்
இருட்டினில் பிரியுமெனில்
என் மனம் கொண்ட நிழல்
சில கருத்தினில் பிரியுமன்றோ......

எனவே மனமே நீ தளராய்........

உயிருருக உடல் கரைய
பிறரைக் காதலித்த
பெருந்தவறு இனி வேண்டாம்
உன்னைக் காதலிக்க
மனமே நீ முயல்வாய்....

பிறந்த உடல்
இறந்து போகும்
பிரிந்த உயிர்
தனியே வாடும்
உடன்வருவோர் எவருமின்றி
கடந்தே ஏகும் காலங்களில்....
கிடந்தே கழியும் நொடிகளில்...
உணர்ந்தே போவாய் மனமே......

நட்பென்றும் காதலென்றும்
நலம் நாடும் உறவென்றும்
நொந்த நிலை இனியும் வேண்டா...
என் மனமே....
பந்த நிலைதானறுத்து
பகுத்தறிவின் விலை தொகுத்து
எந்தன் மனமே ஏகாய் நீ.........

No comments:

Post a Comment